இலக்கணம் - பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு சொற்களில் மூன்று சொற்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ஒரு சொல் மட்டும் தனித்து நிற்கும் அச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதலே பொருந்தச்சொல்லைக் கண்டறிதல் எனப்படும்.
* ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சொற்கள் பின்வருமாறு இவற்றை தெரிந்து கொண்டால் தேர்வில் பதிலளிக்க இன்னும் சுலபமாக இருக்கும்.
பொருளணி வகைகள்:
1. உவமை
2. உருவகம்
இருமை :
1. இம்மை
2. மறுமை
இருவினை :
1. நல்வினை
2. தீவினை
இருதிணை :
1. உயர்திணை
2. அஃறிணை
இருசுடர் :
1. ஞாயிறு
2. திங்கள்
ஈரெச்சம் :
1. வினையெச்சம்
2. பெயரெச்சம்
சீறாப்புராணம் 3 காண்டங்கள் :
1. விலாதத்துக் காண்டம்
2. நுபுவவித்துக் காண்டம்
3. சஜிரத்துக் காண்டம்
முக்கனி :
1. மா
2. பலா
3. வாழை
முந்நீர் :
1. ஆற்றுநீர்
2. ஊற்றுநீர்
3. மழைநீர்
முப்பால் :
1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. காமத்துப்பால்
முத்தமிழ் :
1. இயற்றமிழ்
2. இசைத்தமிழ்
3. நாடகத்தமிழ்
முக்காலம் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்
முச்சங்கம் :
1. முதற்சங்கம்
2. இடைச்சங்கம்
3. கடைச்சங்கம்
மூன்று முரசு :
1. கொடை முரசு
2. படை முரசு
3. மங்கள முரசு
மூவகை மொழிகள் :
1. தனிமொழி
2. பொதுமொழி
3. தொடர்மொழி
மூவண்ணம் :
1. காவி
2. வெண்மை
3. பச்சை
மூவிடம் :
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை
மூவேந்தர் :
1. சேரன்
2. சோழன்
3. பாண்டியன்
சொல்லணி வகைகள் :
1. சிலேடை
2. மடக்கு
3. யமகமி
4. திரிபு
வினைப்பகா பதங்கள் :
1. உண்
2. எழுது
3. காட்டு
4. படி
இடைப் பகாபதங்கள் :
1. உம்
2. மற்று
3. போல
4. ஆல்
உரிப்பகாபதம் :
1. நனி
2. தவ
3. சால
4. உறு
நால்வகை உணவு :
1. உண்ணல்
2. தின்னல்
3. பருகல்
4. நக்கல்
நால்வகை சொல் :
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
நான்மறை :
1. ரிக்
2. யசூர்
3. சாம
4. அதர்வணம்
நாற்குணம் :
1. அச்சம்
2. மடம்
3. நானம்
4. பயிர்ப்பு
நாற்படை :
1. தேர்
2. யானை
3. குதிரை
4. காலாள்
நாற்றிசை :
1. கிழக்கு
2. மேற்கு
3. தெற்கு
4. வடக்கு
நானிலம் :
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
நாற்பால் :
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்
ஆசிரியப்பா வகைகள் :
1. நேரிசை ஆசிரியப்பா
2. நிலை மண்டில ஆசிரியப்பா
3. அடிமறி மண்டில ஆசிரியப்பா
4. இணைக்குறள் ஆசிரியப்பா
ஐம்பால் :
1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
4. ஒன்றன்பால்
5. பலவின்பால்
ஐம்பெரும்பொருள்கள்
1. நிலம்
2. நீர்
3. காற்று
4. நெருப்பு
5. வானம்
ஐந்தொகை :
1. முதல்
2. வரவு
3. செலவு
4. இருப்பு
5. ஆதாயம்
ஐந்திலக்கணம் :
1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி
ஐந்தினை :
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
அன்பின் ஐந்திணை :
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
ஐவகை பாக்கள் :
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
5. மருட்பா
ஐம்பெருங்காப்பியங்கள் :
1. சீவகசிந்தாமணி
2. சிலப்பதிகாரம்
3. மணிமேகலை
4. வளையாபதி
5. குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள் :
1. நாககுமார காப்பியம்
2. உதயணகுமார காவியம்
3. யசோதர காவியம்
4. சூளாமணி
5. நீலகேசி
ஐம்பெருங்குழு :
1. சாரணர்
2. சேனாதியார்
3. தூதர்
4. புரோகிதர்
5. அமைச்சர்
ஐம்பொறிகள் :
1. ஊறு
2. சுவை
3. ஒளி
4. நாற்றம்
5. ஓசை
ஐம்புலன் :
1. மெய்
2. வாய்
3. மூக்கு
4. கண்
5. செவி
பகுபத உறுப்புகள் ஆறு :
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சாரியை
5. சந்தி
6. விகாரம்
பெரும் பொழுது :
1. கார்காலம்
2. குளிர்காலம்
3. முன்பணி
4. பின்பணி
5. இளவேனிற்காலம்
6. முதுவேனிற்காலம்
சிறுபொழுது :
1. காலை
2. நண்பகல்
3. ஏற்பாடு
4. மாலை
5. யாமம்
6. வைகறை
அறுசுவை :
1. இனிப்பு
2. கசப்பு
3. புளிப்பு
4. உவர்ப்பு
5. துவர்ப்பு
6. கார்ப்பு
எழுவகை பெண்பால் பருவப்பெயர்கள் :
1. பேதை
2. பெதும்பை
3. மங்கை
4. மடந்தை
5. அரிவை
6. தெரிவை
7. பேரிளம்பெண்
ஏழிசை :
1. குரல்
2. துத்தம்
3. கைக்கிளை
4. உழை
5. கிளி
6. விளரி
7. தாரம்
கடையேழு வள்ளல்கள் :
1. பேகன்
2. பாரி
3. காரி
4. ஆய்
5. அதிகன்
6. நள்ளி
7. ஓரி
மலரின் பருவங்கள் 7 :
1. அரும்பு
2. மொட்டு
3. முகை
4. மலர்
5. அலர்
6. வி
7. செம்மல்
அகத்திணை7 :
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
6. கைக்கிளை
7. பெருந்திணை
எட்டுத்தொகை :
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
எண்வகை மெய்ப்பாடுகள் :
1. நகை
2. அழுகை
3. இளிவரல்
4. மருட்கை
5. அச்சம்
6. பெருமிதம்
7. வெகுளி
8. உவகை
நவரத்தினங்கள் :
1. கோமேதகம்
2. நீலம்
3. பவளம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைரம்
9. வைடூரியம்
நவதானியங்கள் :
1. நெல்
2. துவரை
3. பச்சைப்பயறு
4. உளுந்து
5. எள்
6. அவரை
7. கடலை
8. கொள்ளு
9. கோதுமை
ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :
1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வருகை
7. அம்புலி
8. சிற்றில்
9. சிறுபறை
10. சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10 :
1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வருகை
7. அம்புலி
8. அம்மாணை
9. கழங்கு
10. ஊசல்
பத்துப்பாட்டு :
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. கூத்தராற்றுப்படை
6. மதுரைக்காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. முல்லைப்பாட்டு
10. பட்டினப்பாலை
தமிழ் மாதங்கள்:
1. சித்திரை
2. வைகாசி
3. ஆணி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
பன்னிரெண்டு இராசிகள் :
1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம
11. கும்பம்
12. மீனம்
புறத்திணை:12 :
1. வெட்சி
2. கரந்தை
3. வஞ்சி
4. காஞ்சி
5. உழிஞை
6. நொச்சி
7. தும்பை
8. கைக்கிளை
9. பெருந்திணை
10. வாகை
11. பாடாண்
12. பொதுவியல்
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் :
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. திரிகடுகம்
6. ஆசாரக்கோவை
7. பழமொழி
8. சிறுபஞ்சமூலம்
9. ஏலாதி
10. திருக்குறள்
11. முதுமொழிக்காஞ்சி
12. ஐந்தினை ஐம்பது
13. ஐந்திணை எழுபது
14. திணைமொழி ஐம்பது
15. திணைமாலை நூற்றைம்பது
16. கார் நாற்பது
17. களவழி நாற்பது
18. கைந்நிலை.
No comments:
Post a Comment