DAILY CURRENT AFFAIRS :26 SEPTEMBER 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள்:



சர்வதேச நிகழ்வுகள்


அருணாசல பிரதேசத்தையொட்டிய திபெத் நகருக்கு சீன அதிபர் வருகை புரிந்துள்ளார்.


சீன அதிபர் ஷி ஷின்பிங், அருணாசல பிரதேசத்தையொட்டிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நையிங்சி நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

திபெத் பகுதியை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 70-ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் அவர் அந்த மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

1912-ஆம் ஆண்டு முதல் சுதந்திரமான தனி நாடாக இயங்கி வந்த திபெத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

அந்த இணைப்பை ‘திபெத்தின் அமைதி முறையிலான விடுதலை’ என்று சீனா கூறிக் கொண்டாலும், அது தங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்று இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ள திபெத் அரசும், அந்த நாட்டு மக்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திபெத் இணைப்பைக் குறிக்கும் வகையில் அந்தப் பகுதியில்

ஷி ஜின்பிங் முதல்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


அருணாச்சல பிரதேசம்

தலைநகரம் : இட்டாநகர்

ஆளுநர் : பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா

முதலமைச்சர் :பெமா காண்டு

சீனா

தலைநகரம் : பெய்ஜிங்

நாணயம் : ரென்மின்பி & யுவான்

தலைவர் – ஜி ஜின்பிங்

தேசிய நிகழ்வுகள்


வெளிப்படை தன்மையில் இந்தியா 100% மதிப்பெண் பெற்றுள்ளது – ஐ.நா.அறிக்கை


எண்ம முறையிலான (டிஜிட்டல்) நிலையான வர்த்தக வசதி தொடர்பாக ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்களுடன் முன்னேறியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்தது.

143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதப் பயன்பாடு இல்லாத வர்த்தகம், நாடுகள் தாண்டி வர்த்தகம் ஆகிய 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் மகளிர் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது.

2021 உலக பல்கலைக்கழக உச்சி மாநாட்டை துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.


இந்திய துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு 2021 (WUS 21) உலக பல்கலைக்கழக உச்சி மாநாட்டைத் தொடங்கினார்.

இந்த உச்சிமாநாட்டை பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் “எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன பின்னடைவை உருவாக்குதல், சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக பாதிப்பு” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது.

WUS 21 – World Universities Summit 2021

என்எஸ்இ (NSE) அறக்கட்டளை கோவிட் -19 தடுப்பூசிக்கான பெரிய அளவிலான சிஎஸ்ஆர் (CSR) ‘கேவாச்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


தேசிய பங்குச் சந்தையின் (NSE) துணை நிறுவனமான என்எஸ்இ அறக்கட்டளை, என்ஐடிஐ ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF)உடன் இணைந்து, இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ‘கேவாச்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் தொலைதூர மாவட்டங்களில் தடுப்பூசி அதிகரிப்பதற்கு அடிமட்ட அளவிலான பங்காளிகள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளை ஒன்றிணைக்கும்.

UNICEF – United Nations Children’s Fund

NSE – National Stock Exchange

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :1992

மாநில நிகழ்வுகள்


1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்தசைவ சமய பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின்அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லகுலம் என்றால் தடி, ஈசம் என்றால் ஈஸ்வரன். தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமான் மனித உருவில் 28-வது அவதாரமாக உருவெடுத்தார் என்று கூறப்படுகிறது.

அவரே லகுலீசன் என்று அழைக்கப்படுகிறார். சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்தில் இருந்து லகுலீச பாசுபதம் தோன்றியது.

இந்த சிலையானது 95 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்டது.

பத்திரப் பதிவு சேவைகள் மக்களுக்கானதாக எளிமையாய் அமைந்திட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


வணிகவரி மற்றும் பதிவுத் துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அறிவியல்/ தொழிற்நுட்பம்


ஆகாஷ் ஏவுகணை


மூன்று நாளில் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(DRDO) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன.

மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது.

இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக DRDO குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 

Home நடப்பு நிகழ்வுகள் தினசரி

நடப்பு நிகழ்வுகள்தினசரி

Daily Current Affairs July 24 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

By Deepika- July 24, 20210

Daily Current Affairs July 24 2021 in Tamil

Daily Current Affairs July 24 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!


சர்வதேச நிகழ்வுகள்


அருணாசல பிரதேசத்தையொட்டிய திபெத் நகருக்கு சீன அதிபர் வருகை புரிந்துள்ளார்.


சீன அதிபர் ஷி ஷின்பிங், அருணாசல பிரதேசத்தையொட்டிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நையிங்சி நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

திபெத் பகுதியை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 70-ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் அவர் அந்த மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

1912-ஆம் ஆண்டு முதல் சுதந்திரமான தனி நாடாக இயங்கி வந்த திபெத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

அந்த இணைப்பை ‘திபெத்தின் அமைதி முறையிலான விடுதலை’ என்று சீனா கூறிக் கொண்டாலும், அது தங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்று இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ள திபெத் அரசும், அந்த நாட்டு மக்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திபெத் இணைப்பைக் குறிக்கும் வகையில் அந்தப் பகுதியில்

ஷி ஜின்பிங் முதல்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


அருணாச்சல பிரதேசம்

தலைநகரம் : இட்டாநகர்

ஆளுநர் : பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா

முதலமைச்சர் :பெமா காண்டு

சீனா

தலைநகரம் : பெய்ஜிங்

நாணயம் : ரென்மின்பி & யுவான்

தலைவர் – ஜி ஜின்பிங்

தேசிய நிகழ்வுகள்


வெளிப்படை தன்மையில் இந்தியா 100% மதிப்பெண் பெற்றுள்ளது – ஐ.நா.அறிக்கை


எண்ம முறையிலான (டிஜிட்டல்) நிலையான வர்த்தக வசதி தொடர்பாக ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்களுடன் முன்னேறியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்தது.

143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதப் பயன்பாடு இல்லாத வர்த்தகம், நாடுகள் தாண்டி வர்த்தகம் ஆகிய 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் மகளிர் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது.

2021 உலக பல்கலைக்கழக உச்சி மாநாட்டை துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.


இந்திய துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு 2021 (WUS 21) உலக பல்கலைக்கழக உச்சி மாநாட்டைத் தொடங்கினார்.

இந்த உச்சிமாநாட்டை பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் “எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன பின்னடைவை உருவாக்குதல், சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூக பாதிப்பு” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது.

WUS 21 – World Universities Summit 2021

என்எஸ்இ (NSE) அறக்கட்டளை கோவிட் -19 தடுப்பூசிக்கான பெரிய அளவிலான சிஎஸ்ஆர் (CSR) ‘கேவாச்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


தேசிய பங்குச் சந்தையின் (NSE) துணை நிறுவனமான என்எஸ்இ அறக்கட்டளை, என்ஐடிஐ ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF)உடன் இணைந்து, இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ‘கேவாச்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் தொலைதூர மாவட்டங்களில் தடுப்பூசி அதிகரிப்பதற்கு அடிமட்ட அளவிலான பங்காளிகள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளை ஒன்றிணைக்கும்.

UNICEF – United Nations Children’s Fund

NSE – National Stock Exchange

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :1992

மாநில நிகழ்வுகள்


1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கோழியாளம் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் காலத்தைச் சேர்ந்தசைவ சமய பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின்அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லகுலம் என்றால் தடி, ஈசம் என்றால் ஈஸ்வரன். தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமான் மனித உருவில் 28-வது அவதாரமாக உருவெடுத்தார் என்று கூறப்படுகிறது.

அவரே லகுலீசன் என்று அழைக்கப்படுகிறார். சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்தில் இருந்து லகுலீச பாசுபதம் தோன்றியது.

இந்த சிலையானது 95 செ.மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்டது.

பத்திரப் பதிவு சேவைகள் மக்களுக்கானதாக எளிமையாய் அமைந்திட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


வணிகவரி மற்றும் பதிவுத் துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அறிவியல்/ தொழிற்நுட்பம்


ஆகாஷ் ஏவுகணை


மூன்று நாளில் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(DRDO) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.கடந்த ஜூலை 21ம் தேதியும், ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில், வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

வானில் அதிவேகத்தில் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்த ஏவுகணை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்பாடுகள் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள், கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன.

மோசமான வானிலையிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வானிலை சூழலிலும், இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படும் என்பதை நிருபித்துள்ளது.

இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனையின் வெற்றிக்காக DRDO குழுவினருக்கு அதன் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறப்பு


கேரளாவின் மூத்த மாணவி பாகீரதி அம்மா(107) காலமானார்.


பாகீரதி அம்மா தனது 105வது வயதில் கேரள மாநில கல்வித்திட்டதால் நடத்தப்பட்ட 4 ம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதினார்.

இதன் மூலம் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மிக மூத்த மாணவி என்ற சாதனையையும் படைத்தார்.

மேலும் மத்திய அரசின் புகழ்பெற்ற நாரிசக்தி புரஷ்கார் விருதும் இவருக்கு கிடைத்தது.

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் இவரை பாராட்டியுள்ளார்.

கேரளா

தலைநகரம் : திருவனந்தபுரம்

முதலமைச்சர் : பினராயி விஜயன்

ஆளுநர் : ஆரிப் முகமது கான்

விருதுகள்


அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு( AIFF) விருதுகள்


சந்தேஷ் ஜிங்கன் 2020–21 ஆம் ஆண்டின் AIFF ஆண்கள் கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது பெற்ற பின்னர் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

2020–21 ஆம் ஆண்டின் AIFF மகளிர் கால்பந்து வீரராக நங்கோம் பாலா தேவி தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் இந்த விருதை வென்றார்.

மனிஷா கல்யாண் மற்றும் சுரேஷ் வாங்ஜாம் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளை வென்றுள்ளனர்.

AIFF – All India Football Federation

தலைநகரம் :புதுடில்லி

தலைவர்: திரு. பிரபுல் படேல்

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 1937

பொருளாதாரம்


தீவிர பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான உலகின் முதல் விண்வெளி அடிப்படையிலான டிஜிட்டல் நாணய பரிமாற்றமாக பிட்யூ இந்தியா திகழ்கிறது.


ரைட்ஷேர் திட்டத்தின் கீழ் ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில் அதன் டிஜிட்டல் பாதுகாப்பு உள்கட்டமைப்பை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவுவதற்காக ஸ்பேட்செயினுடன் பிட்யூ இந்தியா கூட்டுசேர்ந்துள்ளது.

இது மிகவும் பாதுகாப்பான பிட்காயின் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கான விண்வெளி-தர உள்கட்டமைப்பின் உயர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அதன் பொது செயற்கைக்கோள் விசையை ஒரு விண்வெளி முனையில் காப்புப் பிரதி எடுப்பதற்கும் உலகின் முதல் கிரிப்டோகரன்சி பரிமாற்றமாக பிட்யூ இந்தியா குறிக்கிறது.

விளையாட்டு


டோக்கியோ ஒலிம்பிக்


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ல் தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது.

ஜப்பானிய அரசர் நிரூஹிடோ ஒலிம்பிக்கை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதாக அறிவித்தார். ஜப்பானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைப்பது இது 3-ஆவது முறையாகும்.


No comments:

Post a Comment